
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பிரதமரும் நிதியமைச்சருமான அன்வார் இப்ராஹிம், 2026 ஆம் ஆண்டில் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் மானியங்களுக்காக அரசாங்கம் சுமார் RM40 பில்லியன் வரை செலவிட வேண்டிய நிலை உருவாகலாம் என்று தெரிவித்தார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் அரசின் மானியச் செலவுகளும் அதிகரிக்கும் என்றும், மக்களின் வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

