Saturday, July 4, 2026
HomeBusinessமக்களின் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை! சுங்கை லங்காட் அணையில் அவசரநிலை ஒத்திகை நடத்திய...

மக்களின் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை! சுங்கை லங்காட் அணையில் அவசரநிலை ஒத்திகை நடத்திய ஆயிர் சிலாங்கூர்

மக்களுக்கு இடையறாத குடிநீர் விநியோகத்தை வழங்கும் நோக்கில், ஆயிர் சிலாங்கூர் அண்மையில் சுங்கை லங்காட் அணையில் (Sungai Langat Dam) சிறப்பு அவசரநிலை ஒத்திகைப் பயிற்சியை நடத்தியது.

இயற்கைப் பேரிடர் அல்லது எதிர்பாராத சம்பவங்கள் ஏற்பட்டால் எவ்வாறு விரைவாக செயல்பட வேண்டும், குடிநீர் விநியோகம் பாதிக்கப்படாமல் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதற்கான தயார்நிலையை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

இந்த ஒத்திகையின் மூலம் ஆயிர் சிலாங்கூர், மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படும் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், தற்போதுள்ள அவசரகால செயல்திட்டங்கள் நடைமுறைக்கு ஏற்றவையாக உள்ளனவா என்பதையும் மதிப்பீடு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆயிர் சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி ஆடம் சஃபியான் கசாலி, ஹுலு லங்காட் மாவட்ட அதிகாரி டத்தோ ஹாஜி முகமது ஜுஸ்னி ஹாஷிம், மலேசிய சிவில் பாதுகாப்புப் படை (APM), மலேசிய அரச காவல்துறை (PDRM), மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM), சிலாங்கூர் மாநில பேரிடர் மேலாண்மை பிரிவு மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுபோன்ற அவசரநிலை ஒத்திகைகளை தொடர்ந்து நடத்துவதன் மூலம், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசரச் சூழ்நிலையையும் திறம்பட சமாளிக்க ஏர் சிலாங்கூர் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

மக்களுக்கு பாதுகாப்பான, தரமான மற்றும் இடையறாத குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதே ஆயிர் சிலாங்கூரின் முக்கிய இலக்காகும். அதற்காக இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular